search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    ஸ்ரீகாளஹஸ்தி அருகே மோட்டர் சைக்கிள்கள் மோதல்- மாணவர் உள்பட 2 பேர் பலி

    ஸ்ரீகாளஹஸ்தி அருகே விபத்தில் மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீ காளஹஸ்தி:

    சித்தூர் மாவட்டம் வெங்கடகிரி பகுதியை சேர்ந்தவர்கள் கவுசிக் (வயது15), விஷ்ணு (15), பார்கவ் (14). 9-ம் வகுப்பு மாணவர்கள். நண்பர்களான இவர்கள் 3 பேரும் ஏர்ப்பேட் - வெங்கடகிரி நெடுஞ்சாலையில் ஸ்ரீகாளஹஸ்தி மண்டலம் வாம்பள்ளி அருகில் ஏர்ப்பேடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது ஏர்ப்பேடு மண்டலம் பன்டிவானிப் பள்ளி பகுதியை சேர்ந்த நாகராஜ் (22) என்ற வாலிபர் வெங்கடகிரிக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். வாம்பள்ளி சோதனைச் சாவடி அருகில் இரண்டு மோட்டார்சைக்கிள்களும் மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் கவுசிக் மற்றும் நாகராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விஷ்ணு மற்றும் பார்கவ் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு வெங்கடகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீகாளஹஸ்தி புறநகர் போலீசார் விரைந்து சென்று விபத்தில் இறந்த கவுசிக் மற்றும் நாகராஜ் ஆகியோரின் உடல்களை பிரேதபரிசோதனைக்கா ஸ்ரீ காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×