என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.3¼ கோடி
Byமாலை மலர்27 Jan 2021 2:11 AM GMT (Updated: 27 Jan 2021 2:11 AM GMT)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கை மூலம் ஜனவரி மாதம் உண்டியல் வருமானம் ரூ.3¼ கோடி கிடைத்துள்ளது.
திருச்செந்தூர் :
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொது மக்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் மாதம் இரண்டு முறை எண்ணப்படும். ஜனவரி மாத உண்டியல் கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன.
கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி தலைமையில், தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர்கள் செல்வராஜ், ரோஜாலி, ஆய்வாளர்கள் முருகன், நம்பி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் மற்றும் சிவகாசி பதினெண்சித்தர் மடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர் உண்டியல் பணத்தை எண்ணினர். கடந்த 20-ந் தேதி எண்ணப்பட்ட உண்டியலில் இருந்து 2 கோடியே 47 லட்சத்து 12 ஆயிரத்து 611 ரூபாய் கிடைத்திருந்தது.
உண்டியல் 2-வது முறையாக நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. நிரந்தர உண்டியலில் இருந்து 73 லட்சத்து 35 ஆயிரத்து 935 ரூபாயும், மேலக்கோபுர திருப்பணி உண்டியலில் 3 லட்சத்து 70 ஆயிரத்து 699 ரூபாயும் கிடைத்தது. இரண்டு உண்டியல் எண்ணிக்கையிலும் சேர்த்து மொத்தத்தில் 3 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 245 ரூபாய் கிடைத்துள்ளது. அதேபோல், இரண்டு உண்டியல் எண்ணிக்கையிலும் சேர்ந்து 1, 503 கிராம் தங்கமும், 24 ஆயிரத்து 546 கிராம் வெள்ளியும், 105 வெளிநாட்டு நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொது மக்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் மாதம் இரண்டு முறை எண்ணப்படும். ஜனவரி மாத உண்டியல் கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன.
கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி தலைமையில், தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர்கள் செல்வராஜ், ரோஜாலி, ஆய்வாளர்கள் முருகன், நம்பி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் மற்றும் சிவகாசி பதினெண்சித்தர் மடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர் உண்டியல் பணத்தை எண்ணினர். கடந்த 20-ந் தேதி எண்ணப்பட்ட உண்டியலில் இருந்து 2 கோடியே 47 லட்சத்து 12 ஆயிரத்து 611 ரூபாய் கிடைத்திருந்தது.
உண்டியல் 2-வது முறையாக நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. நிரந்தர உண்டியலில் இருந்து 73 லட்சத்து 35 ஆயிரத்து 935 ரூபாயும், மேலக்கோபுர திருப்பணி உண்டியலில் 3 லட்சத்து 70 ஆயிரத்து 699 ரூபாயும் கிடைத்தது. இரண்டு உண்டியல் எண்ணிக்கையிலும் சேர்த்து மொத்தத்தில் 3 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 245 ரூபாய் கிடைத்துள்ளது. அதேபோல், இரண்டு உண்டியல் எண்ணிக்கையிலும் சேர்ந்து 1, 503 கிராம் தங்கமும், 24 ஆயிரத்து 546 கிராம் வெள்ளியும், 105 வெளிநாட்டு நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X