search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்.முருகன்
    X
    எல்.முருகன்

    மோடியின் வழிகாட்டுதல் தமிழகத்துக்கும் தேவை என மக்கள் நினைக்கிறார்கள்- எல்.முருகன் பேச்சு

    பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் தமிழகத்துக்கும் தேவை என மக்கள் நினைக்கிறார்கள் என்று பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் பேசியுள்ளார்.
    திருச்சி:

    பா.ஜ.க. பட்டியல் அணியின் மாநில மாநாடு குறித்த கலந்தாய்வு கூட்டம் திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள ஒரு கல்லூரியில் நேற்று நடந்தது. பட்டியல் அணி மாநில தலைவர் பொன் வி.பாலகணபதி தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசும்போது, மோடியின் வழிகாட்டுதல் தமிழகத்துக்கும் தேவை என மக்கள் நினைக்கிறார்கள். 10 வருடத்துக்கு முன்பு நாம் சில மாவட்டங்களுக்கு சென்று உறுப்பினர்கள் கூட சேர்க்க முடியாத நிலை இருந்தது. இப்போது நம்மை வரச்சொல்லி அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார். 

    கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.செல்வகுமார், செய்தி தொடர்பாளர் சுப.நாகராஜன், துணைத்தலைவர் புரட்சி கவிதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×