search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    தமிழகத்தை மீண்டும் கட்டமைக்க உதவ விரும்புகிறேன் - ராகுல்காந்தி

    தமிழகத்தை மீண்டும் கட்டமைக்க உதவ விரும்புகிறேன், உலகமே தமிழகத்தை உற்றுநோக்க வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
    கோவை:

    தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    அந்த வகையில், தேர்தல் பிரசாரத்திற்காக 3 நாள் பயணமாக ராகுல்காந்தி இன்று தமிழகம் வந்துளார்.

    கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் ராகுல்காந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளார்.

    இந்நிலையில், ராகுல்காந்தி தனது முதல்கட்ட பிரசாரத்தை இன்று கோவை மாவட்டத்தில் தொடங்கினார். கோவையின் சின்னியபாளையத்தில் ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    * தமிழகத்தின் கலாச்சாரத்தை மத்திய அரசு மதிப்பதில்லை

    * தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் பிரதமர் (மோடி) புரிந்து கொள்ளவில்லை

    *இந்தியாவில் ஒரு மொழி மட்டுமே இருக்க வேண்டும் என பிரதமர் (மோடி) விரும்புகிறார்

    * தமிழகத்தை மீண்டும் கட்டமைக்க உதவ விரும்புகிறேன், உலகமே தமிழகத்தை உற்றுநோக்க வேண்டும்  

    * தமிழர்களின் உரிமைகளை, எதிர்பார்ப்புகளை பாதுகாப்பேன்.

    * தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் தமிழகமே இந்தியாக இருக்கும்

    என்றார்.
    Next Story
    ×