என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 24ந் தேதி சேலம் வருகிறார்
Byமாலை மலர்22 Jan 2021 9:36 AM GMT (Updated: 22 Jan 2021 9:36 AM GMT)
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 24-ந் தேதி சேலம் வருகிறார்.
சேலம்:
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே பிரசாரத்தில் இறங்கி விட்டன. அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் வருகிற 24-ந் தேதி இரவு கோவையில் இருந்து கார் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருகிறார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இரவு தங்குகிறார்.
பின்னர் 25-ந் தேதி காலை எடப்பாடி தொகுதி சிலுவம்பாளையம் அருகே கோனேரிப்பட்டியில் உள்ள ஓம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சிக்கு செல்லும் அவர் மாலையில் அங்கு நடக்கும் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருகையை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே பிரசாரத்தில் இறங்கி விட்டன. அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் வருகிற 24-ந் தேதி இரவு கோவையில் இருந்து கார் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருகிறார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இரவு தங்குகிறார்.
பின்னர் 25-ந் தேதி காலை எடப்பாடி தொகுதி சிலுவம்பாளையம் அருகே கோனேரிப்பட்டியில் உள்ள ஓம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சிக்கு செல்லும் அவர் மாலையில் அங்கு நடக்கும் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருகையை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X