search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தமிழகத்தில் குறைந்து கொண்டிருந்த கொரோனா தொற்று சற்று உயர்ந்தது

    தமிழகத்தில் குறைந்து கொண்டிருந்த கொரோனா தொற்று சற்று உயர்ந்தது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்றைய (வியாழக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்து 788 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 366 ஆண்கள், 230 பெண்கள் என மொத்தம் 596 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 166 பேரும், செங்கல்பட்டில் 72 பேரும், கோவையில் 59 பேரும், திருப்பூரில் 32 பேரும், சேலத்தில் 27 பேரும் குறைந்தபட்சமாக அரியலூர், கள்ளக்குறிச்சி, நெல்லையில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெரம்பலூரில் நேற்று ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.

    இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 4 பேருக்கும், 12 வயதுக்குட்பட்ட 9 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 133 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 51 லட்சத்து 43 ஆயிரத்து 139 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 33 ஆயிரத்து 11 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 5 லட்சத்து 3 ஆயிரத்து 513 ஆண்களும், 3 லட்சத்து 29 ஆயிரத்து 464 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 34 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 30 ஆயிரத்து 33 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 67 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

    இங்கிலாந்து நாட்டில் கடந்த 8-ந்தேதியில் நேற்று வரை தமிழகம் வந்த 659 பேரில் 531 பேர் கண்டறியப்பட்டு பரிசோதித்ததில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 509 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. மீதமுள்ள 20 பயணிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை.

    கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 6 பேரும் என 9 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.

    அதிகபட்சமாக சென்னையில் 4 பேரும், செங்கல்பட்டில் 2 பேரும், கோவை, தஞ்சாவூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 5 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 12,299 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா பாதிப்பில் இருந்து 705 பேர் நேற்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 189 பேரும், கோவையில் 60 பேரும், செங்கல்பட்டில் 50 பேரும், சேலத்தில் 34 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 15 ஆயிரத்து 516 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர்.

    தற்போது சிகிச்சையில் 5 ஆயிரத்து 314 பேர் உள்ளனர். தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 940 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 1,032 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 559 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 994 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் குறைந்து கொண்டிருந்த கொரோனா தொற்று நேற்று சற்று உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×