search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு நேற்று 2 ஆயிரத்து 393 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2 ஆயிரத்து 555 கன அடியாக அதிகரித்தது.
    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் ஆண்டு தோறும் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் டிசம்பர் 15-ந் தேதி வரை 137 நாட்கள் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்.

    இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். கடந்த ஆண்டு 16 நாட்கள் தாமதமாக ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீரை கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி நிறுத்தியிருக்க வேண்டும், ஆனால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 16-ந் தேதியான இன்று வரை நீர் திறப்பு நீட்டிக்கப்பட்டது.

    இன்று (16-ந் தேதி)மாலை 6 மணிக்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படுகிறது. இதனால் நடப்பாண்டில் கால்வாய் பாசனத்திற்கு 153 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக கால்வாயில் 16 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 2 ஆயிரத்து 393 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2 ஆயிரத்து 555 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரியில் 500 கனஅடியும், கால்வாயில் 400 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 105.49 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 105.58 அடியாக உயர்ந்தது.
    Next Story
    ×