என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Byமாலை மலர்16 Jan 2021 5:54 AM GMT (Updated: 16 Jan 2021 5:54 AM GMT)
மேட்டூர் அணைக்கு நேற்று 2 ஆயிரத்து 393 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2 ஆயிரத்து 555 கன அடியாக அதிகரித்தது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் ஆண்டு தோறும் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் டிசம்பர் 15-ந் தேதி வரை 137 நாட்கள் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்.
இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். கடந்த ஆண்டு 16 நாட்கள் தாமதமாக ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீரை கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி நிறுத்தியிருக்க வேண்டும், ஆனால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 16-ந் தேதியான இன்று வரை நீர் திறப்பு நீட்டிக்கப்பட்டது.
இன்று (16-ந் தேதி)மாலை 6 மணிக்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படுகிறது. இதனால் நடப்பாண்டில் கால்வாய் பாசனத்திற்கு 153 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக கால்வாயில் 16 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணைக்கு நேற்று 2 ஆயிரத்து 393 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2 ஆயிரத்து 555 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரியில் 500 கனஅடியும், கால்வாயில் 400 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 105.49 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 105.58 அடியாக உயர்ந்தது.
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் ஆண்டு தோறும் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் டிசம்பர் 15-ந் தேதி வரை 137 நாட்கள் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்.
இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். கடந்த ஆண்டு 16 நாட்கள் தாமதமாக ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீரை கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி நிறுத்தியிருக்க வேண்டும், ஆனால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 16-ந் தேதியான இன்று வரை நீர் திறப்பு நீட்டிக்கப்பட்டது.
இன்று (16-ந் தேதி)மாலை 6 மணிக்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படுகிறது. இதனால் நடப்பாண்டில் கால்வாய் பாசனத்திற்கு 153 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக கால்வாயில் 16 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணைக்கு நேற்று 2 ஆயிரத்து 393 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2 ஆயிரத்து 555 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரியில் 500 கனஅடியும், கால்வாயில் 400 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 105.49 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 105.58 அடியாக உயர்ந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X