என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
'தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல' கே.பி. முனுசாமியின் பேச்சு - ‘உட்கட்சி விவகாரம்’ என்கிறார் பாஜக குஷ்பு
Byமாலை மலர்10 Jan 2021 12:09 PM GMT (Updated: 10 Jan 2021 12:13 PM GMT)
தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல என்று அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில், கே.பி. முனுசாமி பேசியது அதிமுக ’உட்கட்சி விவகாரம்’ என பாஜக-வை சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
அ.தி.மு.க.வின் செயற்குழு-பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பேசுகையில்,
இந்நிலையில், பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் புதுக்கோட்டையில் பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக-வை சேர்ந்த நடிகை குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை குஷ்பு சந்தித்தார். அப்போது, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமியின் ‘தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல’ என்ற கருத்து தொடர்பாக குஷ்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த பாஜக-வின் குஷ்பு, ’அதிமுகவும், பாஜகவும் ஒன்றையொன்று வழிநடத்தவில்லை. பொதுக்குழுவில் கே.பி. முனுசாமி பேசியது அதிமுக உட்கட்சி விவகாரம்’ என்றார்.
அ.தி.மு.க.வின் செயற்குழு-பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பேசுகையில்,
’(தமிழக சட்டசபை தேர்தலில்) தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல. தேர்தலில் திமுக-அதிமுக இடையேதான் நேரடி போட்டி. ஜனநாயக அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் தான் போட்டி’ என கூறினார்.
கேபி முனுசாமியின் பேச்சு தேசிய கட்சியான பாஜக-வை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இருந்தது. இதனால், அதிமுக-பாஜக இடையே உள்ள கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் புதுக்கோட்டையில் பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக-வை சேர்ந்த நடிகை குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை குஷ்பு சந்தித்தார். அப்போது, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமியின் ‘தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே அல்ல’ என்ற கருத்து தொடர்பாக குஷ்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த பாஜக-வின் குஷ்பு, ’அதிமுகவும், பாஜகவும் ஒன்றையொன்று வழிநடத்தவில்லை. பொதுக்குழுவில் கே.பி. முனுசாமி பேசியது அதிமுக உட்கட்சி விவகாரம்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X