என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரெயில்
Byமாலை மலர்9 Jan 2021 8:09 AM GMT (Updated: 9 Jan 2021 8:09 AM GMT)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
வருகிற 12, 13-ந் தேதிகளில் இரவு 10.30 மணிக்கு சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. 16, 17-ந் தேதிகளில் மதியம் 2.45 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இதேபோல் வருகிற 11-ந் தேதி இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரெயில் சென்னையில் இருந்து கோவைக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் 17-ந் தேதி இரவு 8 மணிக்கு கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
பொங்கல் சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (10-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் தளர்வுகள் அளிக்கப்பட்டு ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டாலும் முழு அளவில் இன்னும் ரெயில் சேவை தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
வருகிற 12, 13-ந் தேதிகளில் இரவு 10.30 மணிக்கு சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. 16, 17-ந் தேதிகளில் மதியம் 2.45 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இதேபோல் வருகிற 11-ந் தேதி இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரெயில் சென்னையில் இருந்து கோவைக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் 17-ந் தேதி இரவு 8 மணிக்கு கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
பொங்கல் சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (10-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் தளர்வுகள் அளிக்கப்பட்டு ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டாலும் முழு அளவில் இன்னும் ரெயில் சேவை தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X