search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு ரெயில்
    X
    சிறப்பு ரெயில்

    பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரெயில்

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    வருகிற 12, 13-ந் தேதிகளில் இரவு 10.30 மணிக்கு சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. 16, 17-ந் தேதிகளில் மதியம் 2.45 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இதேபோல் வருகிற 11-ந் தேதி இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரெயில் சென்னையில் இருந்து கோவைக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் 17-ந் தேதி இரவு 8 மணிக்கு கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    பொங்கல் சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (10-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் தளர்வுகள் அளிக்கப்பட்டு ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

    வெளி மாவட்டங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டாலும் முழு அளவில் இன்னும் ரெயில் சேவை தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×