என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல் அருகே சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபர் கைது
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் தொட்டனம்பட்டியைச் சேர்ந்த பாலுச்சாமி மகன் மதுபாலன் (வயது 19). இவர் ஜம்புளியம்பட்டியில் உள்ள தனது உறவினர் அஜித்குமார் என்பவரின் வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
காதலிப்பதாக கூறி அந்த சிறுமியை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி திடீரென மாயமானார். இது குறித்து மாணவியின் பெற்றோர் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் தேடி வந்த நிலையில் மதுபாலனும், மாணவியும் தனியாக அறை எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் மது பாலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதற்கு உடந்தையாக இருந்த மதுபாலனின் சித்தி சிவரஞ்சனியையும் கைது செய்தனர். வழக்கில் தலைமறைவாக உள்ள அஜித்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். மாணவி சிகிச்சைக்கு பின்பு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்