search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மேலூர் அருகே சொகுசு காரில் 102 கிலோ கஞ்சா கடத்தல் - 2 பேர் கைது

    மேலூர் அருகே சொகுசு காரில் 102 கிலோ கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளரிப்பட்டி சுங்கச்சாவடியில் மேலூர் போலீஸ் டி.எஸ்.பி ரகுபதி ராஜா தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த சொகுசு கார் நிற்காமல் சென்றது.இதனால் அதிர்ச்சியடைந்த போலிசார் சொகுசு காரை விரட்டி சென்று மறித்தனர்.

    பின்னர் காரை சோதனையிட்டதில் அதில் கஞ்சா கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து காரில் இருந்த 102 கிலோ கஞ்சா மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதனை கடத்தி வந்த இருவரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராஜ தானி கிராமத்தை சேர்ந்தவர்கள் மாயி (வயது56), ஈஸ்வரன்(29) என்பது தெரியவந்தது.இருவரையும் போலீசார் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்

    மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன், தனிப்பிரிவு ஏட்டு முத்துக்குமார் வழக்கு பதிவு மேலும்விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×