search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    ஸ்டாலின் கூறியது பொய்யான குற்றச்சாட்டு- எடப்பாடி பழனிசாமி

    பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினர் வழங்குவதாக ஸ்டாலின் கூறியது பொய்யான குற்றச்சாட்டு என தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
    ராசிபுரம்:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், கூட்டணியை இறுதி செய்வதற்கு முன்பாகவே அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். அந்த வகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19-ந்தேதி, தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து, பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு முதற்கட்ட பயணத்தை நிறைவு செய்தார்.

    இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று 2-வது கட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    தமிழக மக்களுக்கு புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாமக்கல் மாவட்டம் ராசியான மாவட்டம். பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினர் வழங்குவதாக ஸ்டாலின் கூறியது பொய்யான குற்றச்சாட்டு. ஏழை, எளிய மக்களை காக்கும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என பேசினார்.
    Next Story
    ×