என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
5 பேருக்கு பா.ம.க. செயல்வீரர் விருதுகள்- ஜி.கே.மணி அறிவிப்பு
Byமாலை மலர்25 Dec 2020 11:53 AM GMT (Updated: 25 Dec 2020 11:53 AM GMT)
2020-ம் ஆண்டுக்கான பாட்டாளி மக்கள் கட்சி சிறந்த செயல்வீரர் விருதுகளைப் பெறுவதற்கான 5 பேரை ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
சென்னை:
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக சிறப்பாக களப்பணியாற்றுபவர்களை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களைப் போன்று தீவிரமாக களப்பணியாற்ற மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பாட்டாளி மக்கள் கட்சி சிறந்த செயல்வீரர்கள் விருது வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
2020-ம் ஆண்டில் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 5 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த டிசம்பர் 11-ம் தேதி அறிவித்து இருந்தார்.
அதன்படி 2020-ம் ஆண்டுக்கான பாட்டாளி மக்கள் கட்சி சிறந்த செயல்வீரர் விருதுகளைப் பெறுவதற்கான 5 பேர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
1. முனைவர் ச.சிவப்பிரகாசம், தலைவர், சமூக முன்னேற்ற சங்கம்
2. மீ.கா. செல்வக்குமார், அமைப்பு செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி
3. திருத்துறைப்பூண்டி டி.எஸ்.ஆர்.எம். சுப்பிரமணிய அய்யர், மாநில துணைத்தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி
4. நிர்மலா ராசா, மாநில செயலாளர், பா.ம.க. மகளிர் அணி.
5. பி.வி.செந்தில், மாநில செயலாளர், பா.ம.க. இளைஞரணி.
பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளின் களப்பணி, தலைமையால் வழங்கப்படும் பணிகளை சிறப்பாக செய்தல், கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுதல் உள்ளிட்ட பணிகளை அளவீடு செய்து அவற்றின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் பாராட்டுப் பத்திரம் மற்றும் ஒரு சவரன் தங்கக் காசு கொண்டதாக இருக்கும்.
வரும் 31-ந்தேதி வியாழக்கிழமை காலை நடைபெறவுள்ள ‘‘2020-ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்... 2021-ம் ஆண்டை வரவேற்போம்’’ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இவை வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக சிறப்பாக களப்பணியாற்றுபவர்களை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களைப் போன்று தீவிரமாக களப்பணியாற்ற மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பாட்டாளி மக்கள் கட்சி சிறந்த செயல்வீரர்கள் விருது வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
2020-ம் ஆண்டில் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 5 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த டிசம்பர் 11-ம் தேதி அறிவித்து இருந்தார்.
அதன்படி 2020-ம் ஆண்டுக்கான பாட்டாளி மக்கள் கட்சி சிறந்த செயல்வீரர் விருதுகளைப் பெறுவதற்கான 5 பேர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
1. முனைவர் ச.சிவப்பிரகாசம், தலைவர், சமூக முன்னேற்ற சங்கம்
2. மீ.கா. செல்வக்குமார், அமைப்பு செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி
3. திருத்துறைப்பூண்டி டி.எஸ்.ஆர்.எம். சுப்பிரமணிய அய்யர், மாநில துணைத்தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி
4. நிர்மலா ராசா, மாநில செயலாளர், பா.ம.க. மகளிர் அணி.
5. பி.வி.செந்தில், மாநில செயலாளர், பா.ம.க. இளைஞரணி.
பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளின் களப்பணி, தலைமையால் வழங்கப்படும் பணிகளை சிறப்பாக செய்தல், கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுதல் உள்ளிட்ட பணிகளை அளவீடு செய்து அவற்றின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் பாராட்டுப் பத்திரம் மற்றும் ஒரு சவரன் தங்கக் காசு கொண்டதாக இருக்கும்.
வரும் 31-ந்தேதி வியாழக்கிழமை காலை நடைபெறவுள்ள ‘‘2020-ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்... 2021-ம் ஆண்டை வரவேற்போம்’’ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இவை வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X