என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரம் அருகே 3 குழந்தைகளை கொன்று கணவன்-மனைவி தற்கொலை
Byமாலை மலர்14 Dec 2020 6:14 AM GMT (Updated: 14 Dec 2020 6:14 AM GMT)
விழுப்புரம் அருகே கந்துவட்டி கொடுமை காரணமாக 3 குழந்தைகளை கொன்று கணவன்-மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே வளவனூர் போலீஸ்சரகம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 32). தச்சுதொழிலாளி. இவரது மனைவி விமலா ஈஸ்வரி (28). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
மோகன் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். இன்று காலை நீண்டநேரமாகியும் மோகனின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி அவர்களை எழுப்ப முயன்றனர். ஆனால் கதவை யாரும் திறக்கவில்லை.
உடனே அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மோகன் மற்றும் அவரது மனைவி விமலா ஈஸ்வரி மற்றும் 3 குழந்தைகள் ஆகிய 5 பேரும் தூக்கில் பிணமாக தொங்கினர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 5 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.
மோகனுக்கு கடந்த சில மாதங்களாக சரிவர வேலை இல்லாத காரணத்தால் அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மோகன் அவதிபட்டு வந்தார்.
எனவே கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி மோகனின் வீட்டிற்கு வந்து கொடுத்த கடனை திருப்பிகேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மோகன் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவுசெய்தார். அதனை மோகன் தனது மனைவி விமலா ஈஸ்வரியிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து கணவன்-மனைவி 2 பேரும் சேர்ந்து வீட்டில் தூங்கிகொண்டிருந்த குழந்தைகள் 3 பேரையும் ஒவ்வொருவராக தனிஅறைக்கு தூக்கி சென்று தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தனர். அதன் பின்னர் மோகனும், அவரது மனைவி விமலா ஈஸ்வரியும் அதே அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண் டனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரு குடும்பமே உயிரை மாய்த்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் அருகே வளவனூர் போலீஸ்சரகம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 32). தச்சுதொழிலாளி. இவரது மனைவி விமலா ஈஸ்வரி (28). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
மோகன் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். இன்று காலை நீண்டநேரமாகியும் மோகனின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி அவர்களை எழுப்ப முயன்றனர். ஆனால் கதவை யாரும் திறக்கவில்லை.
உடனே அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மோகன் மற்றும் அவரது மனைவி விமலா ஈஸ்வரி மற்றும் 3 குழந்தைகள் ஆகிய 5 பேரும் தூக்கில் பிணமாக தொங்கினர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 5 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.
மோகனுக்கு கடந்த சில மாதங்களாக சரிவர வேலை இல்லாத காரணத்தால் அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மோகன் அவதிபட்டு வந்தார்.
எனவே கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி மோகனின் வீட்டிற்கு வந்து கொடுத்த கடனை திருப்பிகேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மோகன் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவுசெய்தார். அதனை மோகன் தனது மனைவி விமலா ஈஸ்வரியிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து கணவன்-மனைவி 2 பேரும் சேர்ந்து வீட்டில் தூங்கிகொண்டிருந்த குழந்தைகள் 3 பேரையும் ஒவ்வொருவராக தனிஅறைக்கு தூக்கி சென்று தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தனர். அதன் பின்னர் மோகனும், அவரது மனைவி விமலா ஈஸ்வரியும் அதே அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண் டனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரு குடும்பமே உயிரை மாய்த்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X