என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மூணாறு அருகே வாக்குப்பதிவு மையத்தில் தகராறு செய்த தொழிலாளி கைது
Byமாலை மலர்11 Dec 2020 8:51 AM GMT (Updated: 11 Dec 2020 8:51 AM GMT)
மூணாறு அருகே வாக்குப்பதிவு மையத்தில் தகராறு செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூணாறு:
மூணாறை அடுத்த இடமலைக்குடி பகுதியில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு, கடந்த 8-ந்தேதி தேர்தல் நடந்தது. இந்த மையத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை. எனவே மலைப்பாதையில் டோலி கட்டி வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது. தேர்தல் முடிந்து, நேற்று முன்தினம் அந்த வாக்குப்பதிவு எந்திரங்களை அதிகாரிகள் ‘சீல்’ வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான சங்கரன் (வயது 25) என்பவர் வாக்குப்பதிவு மையத்திற்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டார். உடனே அவரை அதிகாரிகள் வெளியே செல்லும்படி கூறினர். அவர் அதிகாரிகளை தாக்க முயன்றார். இதுகுறித்து மூணாறு போலீசாருக்கு வாக்குச்சாவடி அலுவலர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சங்கரனை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X