search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மூணாறு அருகே வாக்குப்பதிவு மையத்தில் தகராறு செய்த தொழிலாளி கைது

    மூணாறு அருகே வாக்குப்பதிவு மையத்தில் தகராறு செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மூணாறு:

    மூணாறை அடுத்த இடமலைக்குடி பகுதியில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு, கடந்த 8-ந்தேதி தேர்தல் நடந்தது. இந்த மையத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை. எனவே மலைப்பாதையில் டோலி கட்டி வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது. தேர்தல் முடிந்து, நேற்று முன்தினம் அந்த வாக்குப்பதிவு எந்திரங்களை அதிகாரிகள் ‘சீல்’ வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான சங்கரன் (வயது 25) என்பவர் வாக்குப்பதிவு மையத்திற்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டார். உடனே அவரை அதிகாரிகள் வெளியே செல்லும்படி கூறினர். அவர் அதிகாரிகளை தாக்க முயன்றார். இதுகுறித்து மூணாறு போலீசாருக்கு வாக்குச்சாவடி அலுவலர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சங்கரனை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×