என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கட்சிகள் தங்கள் தேவைக்கு மாவட்டங்களை பிரிப்பது ஏற்கத்தக்கதல்ல: கோர்ட் அதிருப்தி
Byமாலை மலர்3 Dec 2020 1:57 PM GMT (Updated: 3 Dec 2020 1:57 PM GMT)
மாவட்டங்களை பிரிக்கும்போது மாவட்டங்களுக்கு இடையே ஒற்றுமை இருப்பதில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் புதிதாக பிரிக்கப்பட்டது. புதிதாக உருவான தென்காசி மாவட்டத்திற்கு ஆட்சியர் அலுவலகம் போன்றவைகள் கட்ட வேண்டியுள்ளது. ஒரு இடத்தில் அரசு மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அருகே மற்றொரு அரச கட்டடம் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மருத்துவமனை அருகே அரசு அலுவலகம் இருந்தால், நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படும் என ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ‘‘கட்சிகள் தங்கள் தேவைக்கு மாவட்டங்களை பிரிப்பது ஏற்கத்தக்கதல்ல. தற்போதுள்ள அரசுகளும், முந்தைய அரசுகளும் இதை செய்துள்ளன. மாவட்டங்களை பிரிக்கும்போது மாவட்டங்களுக்கு இடையே ஒற்றுமை அவசியம். நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் மாவட்டங்களை பிரிப்பது நல்லது.
ஐந்து எம்.எல்.ஏ., ஒரு எம்.பி. ஒரு ஆட்சியர், எஸ்.பி., நீதிமன்றம் இருக்கும் வகையில் மாவட்டங்கள் பிரிக்கப்பட வேண்டும்’’ என வலியுறுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X