search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    புரெவி புயல் எதிரொலி- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை

    புரெவி புயலின் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றுப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
    சென்னை:

    இலங்கையில் புரெவி புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், பாம்பன் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. புரெவி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. நாகை, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், தூத்துக்குடி, திருச்சி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்தது.

    சென்னையில் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், நுங்கம்பாக்கம், திருவான்மியூர், அடையாறு, வேளச்சேரி, பாரிமுனை, ராயபுரம், மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கேளம்பாக்கம், கூடுவாஞ்சேரி, பூவிருந்தவல்லி, மதுரவாயல், அம்பத்தூர், போரூர் உள்ளிட்ட சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. செம்பரம்பாக்கம், திருவேற்காடு, திருமுல்லைவாயல், பட்டாபிராம் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.
    Next Story
    ×