search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாஸ்
    X
    கருணாஸ்

    சாதி வாரியான கணக்கெடுப்பு- தமிழக அரசின் முடிவுக்கு கருணாஸ் பாராட்டு

    தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைக்கப்படும் என்ற முடிவை முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பில் வரவேற்பதாக கருணாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    முக்குலத்தோர் புலிப்படை நிறுவன தலைவர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைக்கப்படும் என்ற முடிவை முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பில் வரவேற்கிறேன்.

    மத்திய அரசு அறிவித்த சீர்மரபினர் கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் உடனடியாக நடத்தக்கோரி, 68 சமுதாய மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தேன். இந்த ஆணையம் விரைவாக செயல்பட்டு அந்தந்த சமூகத்தினரின் சமூக நீதியை நிலைநாட்ட வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×