search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னையில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது- பொதுப்பணித்துறை

    கோடை காலத்தில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
    சென்னை:

    பூண்டி, புழல் செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளில் 9 டிஎம்சி தண்ணீர் கையிருப்பு உள்ளதாகவும், கோடை காலத்தில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது எனவும் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடியை எட்டியதை அடுத்து உபரிநீர் திறந்துவிடப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்த திருவள்ளூர் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக தினந்தோறும் 100 கனஅடி தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
    Next Story
    ×