search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதார் அட்டை
    X
    ஆதார் அட்டை

    ஆதார் கார்டில் 100 வயது என தவறாக பதிவு- கலெக்டர் அலுவலகத்தில், திருத்தம் கோரி பெண் மனு

    ஆதார் கார்டில் 100 வயது என தவறாக பதிவு செய்ததை திருத்தம் செய்ய கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
    தர்மபுரி:

    அரூர் அருகே உள்ள சூரபட்டி பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 39). இவருடைய ஆதார் கார்டில் இவர் 1921-ம் ஆண்டு பிறந்ததாக தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயியான இவர் பயிர்க்கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்தபோது ஆதார் கார்டில் உள்ள விவரத்தின் அடிப்படையில் இவருக்கு 100 வயது என கருத வேண்டி இருப்பதாக தெரிவித்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு அளித்தார்.
    Next Story
    ×