என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காபி குடிக்கும் கோவில் யானை- பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்
Byமாலை மலர்30 Nov 2020 1:42 AM GMT (Updated: 30 Nov 2020 2:54 PM GMT)
ஆழ்வார்திருநகரியில் ‘ஆதிநாயகி’ யானை காபி குடிப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்டத்தில் நவ திருப்பதி கோவில்களில் கடைசி தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ‘ஆதிநாயகி’ யானை உள்ளது. இந்த யானையை பாகன் பராமரித்து வருகிறார்.
‘ஆதிநாயகி’ யானையை தினமும் காலையில் பாகன் நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது வழக்கம். நடைபயிற்சியின்போது மேல பஜாரில் உள்ள காபி கடையில் பாகன் காபி குடிப்பது வழக்கம். அப்போது நன்கு ஆற்றப்பட்டு சூடு குறைந்த காபியை வாங்கி யானைக்கும் கொடுக்கிறார். அதனை யானையும் ஆர்வத்துடன் விரும்பி பருகுகிறது.
தினமும் காலையில் ‘ஆதிநாயகி’ யானை அந்த கடையில் காபி அருந்த தவறுவது இல்லை. யானை காபி குடிப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நவ திருப்பதி கோவில்களில் கடைசி தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ‘ஆதிநாயகி’ யானை உள்ளது. இந்த யானையை பாகன் பராமரித்து வருகிறார்.
‘ஆதிநாயகி’ யானையை தினமும் காலையில் பாகன் நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது வழக்கம். நடைபயிற்சியின்போது மேல பஜாரில் உள்ள காபி கடையில் பாகன் காபி குடிப்பது வழக்கம். அப்போது நன்கு ஆற்றப்பட்டு சூடு குறைந்த காபியை வாங்கி யானைக்கும் கொடுக்கிறார். அதனை யானையும் ஆர்வத்துடன் விரும்பி பருகுகிறது.
தினமும் காலையில் ‘ஆதிநாயகி’ யானை அந்த கடையில் காபி அருந்த தவறுவது இல்லை. யானை காபி குடிப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X