search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காபி குடிக்கும் ஆதிநாயகி யானை
    X
    காபி குடிக்கும் ஆதிநாயகி யானை

    காபி குடிக்கும் கோவில் யானை- பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்

    ஆழ்வார்திருநகரியில் ‘ஆதிநாயகி’ யானை காபி குடிப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் நவ திருப்பதி கோவில்களில் கடைசி தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ‘ஆதிநாயகி’ யானை உள்ளது. இந்த யானையை பாகன் பராமரித்து வருகிறார்.

    ‘ஆதிநாயகி’ யானையை தினமும் காலையில் பாகன் நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது வழக்கம். நடைபயிற்சியின்போது மேல பஜாரில் உள்ள காபி கடையில் பாகன் காபி குடிப்பது வழக்கம். அப்போது நன்கு ஆற்றப்பட்டு சூடு குறைந்த காபியை வாங்கி யானைக்கும் கொடுக்கிறார். அதனை யானையும் ஆர்வத்துடன் விரும்பி பருகுகிறது.

    தினமும் காலையில் ‘ஆதிநாயகி’ யானை அந்த கடையில் காபி அருந்த தவறுவது இல்லை. யானை காபி குடிப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
    Next Story
    ×