search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சென்னையில் 398 பேர், கோவையில் 148 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்

    தமிழகத்தில் இன்று 1 ஆயிரத்து 459 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று புதிதாக 1 ஆயிரத்து 459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 80 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

    வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 11 ஆயிரத்து 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 1 ஆயிரத்து 471 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 57 ஆயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளது.

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை
    11 ஆயிரத்து 703 ஆக அதிகரித்துள்ளது.

    மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

    அரியலூர் - 2
    செங்கல்பட்டு - 80
    சென்னை - 398
    கோவை - 148
    கடலூர் - 26
    தர்மபுரி - 10
    திண்டுக்கல் - 26
    ஈரோடு - 70
    கள்ளக்குறிச்சி - 7
    காஞ்சிபுரம் - 58
    கன்னியாகுமரி - 16
    கரூர் - 15
    கிருஷ்ணகிரி - 6
    மதுரை - 27
    நாகை - 24
    நாமக்கல் - 28
    நீலகிரி - 37
    பெரம்பலூர் - 0
    புதுக்கோட்டை - 16
    ராமநாதபுரம் - 4
    ராணிப்பேட்டை - 11
    சேலம் - 78
    சிவகங்கை - 12
    தென்காசி - 14
    தஞ்சாவூர் - 32
    தேனி - 4
    திருப்பத்தூர் - 12
    திருவள்ளூர் - 88
    திருவண்ணாமலை - 9
    திருவாரூர் - 10
    தூத்துக்குடி - 15
    திருநெல்வேலி - 8
    திருப்பூர் - 79
    திருச்சி - 21
    வேலூர் - 40
    விழுப்புரம் - 19
    விருதுநகர் - 9
    விமான நிலைய கண்காணிப்பு
    வெளிநாடு - 0
    உள்நாடு - 0
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

    மொத்தம் - 1,459
    Next Story
    ×