search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரி
    X
    பூண்டி ஏரி

    பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி உபரி நீர் திறப்பு

    திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 1,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
    திருவள்ளூர்:

    நிவர் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு ஏரி குளங்கள் நிரம்பின. இதனால் முழு கொள்ளளவை எட்டிய ஏரிகள் பாதுகாப்பு கருதி திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த நேற்று முன்தினம் முதல் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால் திறக்கப்பட்டு அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடுகிறது.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து இன்று மாலை முதல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.  ஏரியில் இருந்து முதற்கட்டமாக விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அமைச்சர் பென்ஜமின், மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் இணைந்து பூண்டி ஏரியில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர். கொசஸ்தலையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×