என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அண்ணா சாலை தர்கா மேற்கூரை சேதம்
Byமாலை மலர்26 Nov 2020 2:45 AM GMT (Updated: 26 Nov 2020 2:45 AM GMT)
சென்னையில் அதிவேக காற்றுடன் பெய்த மழையால் அண்ணா சாலையில் உள்ள தர்கா சேதம் அடைந்தது. தர்காவின் மேற்கூரைகள் அப்படியே பெயர்ந்து, பக்கவாட்டு கம்பிகள் மீது பலத்த சத்தத்துடன் சாய்ந்து விழுந்தது.
சென்னை:
சென்னையில் நேற்று காலை முதலே காற்றின் வேகம் மிகுதியாகவே இருந்தது. அதே வேளை கனமழையும் பெய்து வந்தது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
இந்த நிலையில் அதிவேக காற்றுடன் பெய்த மழையால் சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்கா சேதம் அடைந்தது. தர்காவின் மேற்கூரைகள் அப்படியே பெயர்ந்து, பக்கவாட்டு கம்பிகள் மீது பலத்த சத்தத்துடன் சாய்ந்து விழுந்தது. அருகே உள்ள கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவும் சேதம் அடைந்தது.
தர்காவின் மேற்கூரை சாய்ந்து விழுந்த நேரத்தில் நல்லவேளையாக மக்கள் யாரும் நடமாடவில்லை. அதே வேளை அந்த சமயத்தில் தர்காவிலும் ஆள் இல்லை. இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஒருவேளை காற்றின் வேகம் தாங்காமல் தர்காவின் மேற்கூரை அருகேயுள்ள மின்கம்பத்தில் விழுந்திருந்தால் நிச்சயம் விபரீதம் நிகழ்ந்திருக்கும். நல்லவேளையாக அது நடக்கவில்லை. அண்ணா சாலை தர்கா 100 ஆண்டு பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நேற்று காலை முதலே காற்றின் வேகம் மிகுதியாகவே இருந்தது. அதே வேளை கனமழையும் பெய்து வந்தது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
இந்த நிலையில் அதிவேக காற்றுடன் பெய்த மழையால் சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்கா சேதம் அடைந்தது. தர்காவின் மேற்கூரைகள் அப்படியே பெயர்ந்து, பக்கவாட்டு கம்பிகள் மீது பலத்த சத்தத்துடன் சாய்ந்து விழுந்தது. அருகே உள்ள கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவும் சேதம் அடைந்தது.
தர்காவின் மேற்கூரை சாய்ந்து விழுந்த நேரத்தில் நல்லவேளையாக மக்கள் யாரும் நடமாடவில்லை. அதே வேளை அந்த சமயத்தில் தர்காவிலும் ஆள் இல்லை. இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஒருவேளை காற்றின் வேகம் தாங்காமல் தர்காவின் மேற்கூரை அருகேயுள்ள மின்கம்பத்தில் விழுந்திருந்தால் நிச்சயம் விபரீதம் நிகழ்ந்திருக்கும். நல்லவேளையாக அது நடக்கவில்லை. அண்ணா சாலை தர்கா 100 ஆண்டு பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X