search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ
    X
    தீ

    மகன்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தாய் தீக்குளிப்பு

    நெல்லை சுத்தமல்லியில் மகன்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தாய் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நெல்லை:

    நெல்லை சுத்தமல்லியில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பெயரில்  சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை சுத்தமல்லியில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

    மகன்கள் பிரசாந்த், பிரதீப் கைது செய்யப்பட்டதை கண்டித்து காவல்துறையினர் கண்முன்னே தாய் தீக்குளித்தார். தீக்குளித்த சகுந்தலாவை காப்பாற்ற காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

    படுகாயமடைந்த சகுந்தலா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக சுத்தமல்லி காவல் நிலையத்தில் நெல்லை எஸ்.பி. மணிவண்ணன் நேரில் விசாரணை நடத்தினார்.
    Next Story
    ×