என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கை கடற்படையினரால் தூத்துக்குடி மீனவர்கள் விரட்டியடிப்பு
Byமாலை மலர்21 Nov 2020 2:11 AM GMT (Updated: 21 Nov 2020 2:11 AM GMT)
நடுக்கடலில் மீன் பிடித்த தூத்துக்குடி மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் ஏராளமானவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் 8 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் நேற்று முன்தினம் காலையில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர்.
திடீரென அவர்கள் தூத்துக்குடி மீனவர்களை விரட்டியடித்து உள்ளனர். இதனால் மீனவர்கள் தங்களது வலைகளை அறுத்து விட்டு விட்டு அங்கிருந்து தப்பி வந்தனர். தொடர்ந்து தருவைகுளத்தில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
மேலும், நீண்ட நேரம் நடுக்கடலில் தவித்த மீனவர்கள் மாலை நேரத்தில் மீண்டும் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று வலைகளை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் மீன்பிடித்து வருவதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் ஏராளமானவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் 8 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் நேற்று முன்தினம் காலையில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர்.
திடீரென அவர்கள் தூத்துக்குடி மீனவர்களை விரட்டியடித்து உள்ளனர். இதனால் மீனவர்கள் தங்களது வலைகளை அறுத்து விட்டு விட்டு அங்கிருந்து தப்பி வந்தனர். தொடர்ந்து தருவைகுளத்தில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
மேலும், நீண்ட நேரம் நடுக்கடலில் தவித்த மீனவர்கள் மாலை நேரத்தில் மீண்டும் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று வலைகளை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் மீன்பிடித்து வருவதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X