search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிகாந்த் ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி
    X
    ரஜினிகாந்த் ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி

    ஏழைகளின் முதல்வர் ரஜினிகாந்த்- ரசிகர்களால் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு

    ரஜினிகாந்தை எப்படியும் இந்த முறை தீவிர அரசியல் களத்தில் இறக்கி விட வேண்டும் என அவரது ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
    திருச்சி:

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற அய்யப்பாடு அவரது ரசிகர்களிடம் மட்டுமல்லாது அனைத்து அரசியல் கட்சியினரிடமும் ஏற்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது 2021-ல் தமிழகத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தல்தான் நமது இலக்கு. பழுதான சிஸ்டத்தை சரிபடுத்துவோம் என குரல் கொடுத்தார் ரஜினி. அது, ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தியது. தற்போது கொரோனா காலக்கட்டத்தில் கட்சி தொடங்குவதா? வேண்டாமா? என ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் திருச்சி மாநகரில், அவரது ரசிகர்கள் பரபரப்பு சுவரொட்டிகளை ஒட்டி இருக்கிறார்கள். அதில், “எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. பதவி வேண்டாம். தொண்டன் பதவியே போதும். ஏழைகளின் முதல்வரே மாற்றம் உங்களால் மலரட்டும்“ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

    ரஜினிகாந்தை எப்படியும் இந்த முறை தீவிர அரசியல் களத்தில் இறக்கி விட வேண்டும் என அவரது ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×