என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டார்
Byமாலை மலர்31 Oct 2020 5:24 AM GMT (Updated: 31 Oct 2020 5:24 AM GMT)
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பெருஞ்சாணி அணையின் கொள்ளளவு 77 அடியாகவும், தற்போது நீர்மட்டம் 71.85 அடியாகவும் உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக 273 கனஅடி தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் விவசாயத்துக்கு 450 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதேபோல் பேச்சிப்பாறை அணையின் கொள்ளளவு 48 அடியாகவும், நீர்மட்டம் 44.23 அடியாகவும் உள்ளது. பேச்சிப்பாறை அணையில் வினாடிக்கு 597 கனஅடி தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் விவசாயத்துக்கு 720 கனஅடிநீர் திறந்து விடப்படுகிறது.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து எப்படி உள்ளது. மழை தீவிரம் அடைந்தால் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் போது மதகுகள், கால்வாய்கள் அனைத்தும் சரியாக உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் அரவிந்த் நேற்று பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு சென்றார்.
அணைகளை பார்வையிட்ட அவர், அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அணை பற்றி விவரங்களை கேட்டறிந்தார். அப்போது அணையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அங்கிருந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
அப்போது உதவி செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை (நீர் வளஆதாரஅமைப்பு) கிங்ஸ்லி, திருவட்டார் தாசில்தார் அஜிதா, உதவி பொறியாளர் அருள் செழியன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
குமரி மாவட்டத்தில் பெருஞ்சாணி அணையின் கொள்ளளவு 77 அடியாகவும், தற்போது நீர்மட்டம் 71.85 அடியாகவும் உள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக 273 கனஅடி தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் விவசாயத்துக்கு 450 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதேபோல் பேச்சிப்பாறை அணையின் கொள்ளளவு 48 அடியாகவும், நீர்மட்டம் 44.23 அடியாகவும் உள்ளது. பேச்சிப்பாறை அணையில் வினாடிக்கு 597 கனஅடி தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் விவசாயத்துக்கு 720 கனஅடிநீர் திறந்து விடப்படுகிறது.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து எப்படி உள்ளது. மழை தீவிரம் அடைந்தால் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் போது மதகுகள், கால்வாய்கள் அனைத்தும் சரியாக உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் அரவிந்த் நேற்று பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு சென்றார்.
அணைகளை பார்வையிட்ட அவர், அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அணை பற்றி விவரங்களை கேட்டறிந்தார். அப்போது அணையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அங்கிருந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
அப்போது உதவி செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை (நீர் வளஆதாரஅமைப்பு) கிங்ஸ்லி, திருவட்டார் தாசில்தார் அஜிதா, உதவி பொறியாளர் அருள் செழியன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X