என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடிநீருடன் புழுக்கள் வந்ததால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி
Byமாலை மலர்31 Oct 2020 4:45 AM GMT (Updated: 31 Oct 2020 4:45 AM GMT)
ரேஸ்கோர்ஸ் குடியிருப்புகளுக்கு குடிநீருடன் புழுக்கள் கலந்து வந்ததால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவை:
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அரசு ஊழியர் குடியிருப்புகள் உள்ளன. இதில் வருவாய் துறை ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் 200 வீடுகள் உள்ளன. இங்கு உள்ள தரைமட்ட தொட்டியில் சிறுவாணி குடிநீர் சேகரிக்கப்பட்டு, மின்மோட்டார் மூலம் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுவது வழக்கம். இங்குள்ள வீடுகளுக்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அந்த குடிநீர் கலங்கிய நிலையில் இருந்தது. மேலும் அந்த தண்ணீரில் புழுக்கள் மற்றும் அரைத்தவளை போன்று இருந்ததால் குடியிருப்பில் வசிக்கும் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தண்ணீர் வந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, குடிநீரை வடிகட்டி அனுப்பும் பகுதியில் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. எனவே குடிநீருடன் புழுக்கள் வந்துள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.
இது குறித்து அரசு ஊழியர் குடியிருப்பில் வசிப்பவர்கள் கூறும்போது, இங்குள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்பட்டு பல மாதம் ஆகி விட்டது. இதனால் அடியில் தேங்கி கிடந்த தண்ணீரில் புழுக்கள் உற்பத்தியாகி விட்டன. தற்போது குடிநீருடன் சேர்ந்து புழுக்கள் வந்து விட்டன. எனவே அந்த தண்ணீரை பயன்படுத்தினாலும் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இங்குள்ள தரைமட்ட தொட்டியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அரசு ஊழியர் குடியிருப்புகள் உள்ளன. இதில் வருவாய் துறை ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் 200 வீடுகள் உள்ளன. இங்கு உள்ள தரைமட்ட தொட்டியில் சிறுவாணி குடிநீர் சேகரிக்கப்பட்டு, மின்மோட்டார் மூலம் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுவது வழக்கம். இங்குள்ள வீடுகளுக்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அந்த குடிநீர் கலங்கிய நிலையில் இருந்தது. மேலும் அந்த தண்ணீரில் புழுக்கள் மற்றும் அரைத்தவளை போன்று இருந்ததால் குடியிருப்பில் வசிக்கும் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தண்ணீர் வந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, குடிநீரை வடிகட்டி அனுப்பும் பகுதியில் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. எனவே குடிநீருடன் புழுக்கள் வந்துள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.
இது குறித்து அரசு ஊழியர் குடியிருப்பில் வசிப்பவர்கள் கூறும்போது, இங்குள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்பட்டு பல மாதம் ஆகி விட்டது. இதனால் அடியில் தேங்கி கிடந்த தண்ணீரில் புழுக்கள் உற்பத்தியாகி விட்டன. தற்போது குடிநீருடன் சேர்ந்து புழுக்கள் வந்து விட்டன. எனவே அந்த தண்ணீரை பயன்படுத்தினாலும் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இங்குள்ள தரைமட்ட தொட்டியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X