search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதலமைச்சர், துணை முதலமைச்சர்
    X
    தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதலமைச்சர், துணை முதலமைச்சர்

    தேவர் ஜெயந்தி- மதுரையில் தேவர் திருஉருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை

    தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரது பிறந்த நாளான இன்று தேவர் ஜெயந்தி குரு பூஜையாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி, குருபூஜையையொட்டி அவரது சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர்.

    சிலைக்கு கீழே உள்ள தேவரின் படத்துக்கு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


    Next Story
    ×