என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14ஆயிரத்து 610 கன அடியாக சரிவு
Byமாலை மலர்27 Oct 2020 7:17 AM GMT (Updated: 27 Oct 2020 7:17 AM GMT)
மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 15 ஆயிரத்து 124 கன அடியாக சரிந்த நீர்வரத்து இன்று மேலும் குறைந்து விநாடிக்கு 14 ஆயிரத்து 610 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 20 ஆயிரத்து 298 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று விநாடிக்கு 15 ஆயிரத்து 124 கன அடியாக சரிந்தது. இன்று நீர்வரத்து மேலும் குறைந்து விநாடிக்கு 14 ஆயிரத்து 610 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 800 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட, திறப்பு குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 100.08 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 100.42 அடியாக உயர்ந்தது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 100.70 அடியாக அதிகரித்து உள்ளது.
நீர்மட்டம் தொடர்ந்து 100 அடியை தாண்டி நீடிப்பது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 20 ஆயிரத்து 298 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று விநாடிக்கு 15 ஆயிரத்து 124 கன அடியாக சரிந்தது. இன்று நீர்வரத்து மேலும் குறைந்து விநாடிக்கு 14 ஆயிரத்து 610 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 800 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட, திறப்பு குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 100.08 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 100.42 அடியாக உயர்ந்தது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 100.70 அடியாக அதிகரித்து உள்ளது.
நீர்மட்டம் தொடர்ந்து 100 அடியை தாண்டி நீடிப்பது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X