என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமேசுவரம் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் கடைகளை திறக்க அனுமதி வழங்க கோரிக்கை
Byமாலை மலர்24 Oct 2020 8:38 AM GMT (Updated: 24 Oct 2020 8:38 AM GMT)
ராமேசுவரம் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் கடைகளை திறக்க அனுமதி வழங்க கோரிக்கை விடுத்து வியாபாரிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மேற்கு வாசல் வழியாக பக்தர்கள் வரும் 3-ம் பிரகாரம் பகுதியில் சங்கு, சிப்பி மாலை, சாமி படங்கள், குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யும் சுமார் 50-க்கும் அதிகமான கடைகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதேபோல் ராமேசுவரம் பகுதியிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ராமநாதசாமி கோவிலுக்கும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் கோவிலின் மேற்கு வாசல் பகுதி வழியாக வரும் 3-ம் பிரகாரத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் ராமேசுவரம் கோவிலுக்குள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வரும் நிலையிலும் மேற்கு வாசல் வழியாக பக்தர்கள் சென்று வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலின் மேற்கு வாசல் வழியில் 3-ம் பிரகாரத்தில் உள்ள கடைகள் திறக்கப்படுவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் மேற்கு வாசல் வழியாக பக்தர்கள் சென்று வருவதற்கும் திருக்கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.கோவிலுக்கு வரும் பக்தர்களை நம்பியே 3-ம் பிரகாரத்தில் கடை வைத்துள்ள அனைத்து கடைகளும் கடந்த 7 மாதத்திற்கு மேலாக திறக்கப்படாமல் மூடியே உள்ளன.
கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களை நம்பியே வாழும் வியாபாரிகள் வருமானம் இன்றி குழந்தைகளுடன் பசி பட்டினியுடன் தவித்து வருகின்றனர். வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கோவிலின் மேற்குவாசல் வழியாக பக்தர்கள் வழக்கம்போல் சென்று வருவதற்கும், 7 மாதத்திற்கு மேலாக மூடப்பட்டுக் கிடக்கும் 3-ம் பிரகார பகுதியில் உள்ள கடைகளை திறப்பதற்கும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், திருக்கோவில் நிர்வாகமும் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கடை வைத்துள்ள வியாபாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மேற்கு வாசல் வழியாக பக்தர்கள் வரும் 3-ம் பிரகாரம் பகுதியில் சங்கு, சிப்பி மாலை, சாமி படங்கள், குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யும் சுமார் 50-க்கும் அதிகமான கடைகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதேபோல் ராமேசுவரம் பகுதியிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ராமநாதசாமி கோவிலுக்கும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் கோவிலின் மேற்கு வாசல் பகுதி வழியாக வரும் 3-ம் பிரகாரத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் ராமேசுவரம் கோவிலுக்குள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வரும் நிலையிலும் மேற்கு வாசல் வழியாக பக்தர்கள் சென்று வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலின் மேற்கு வாசல் வழியில் 3-ம் பிரகாரத்தில் உள்ள கடைகள் திறக்கப்படுவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் மேற்கு வாசல் வழியாக பக்தர்கள் சென்று வருவதற்கும் திருக்கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.கோவிலுக்கு வரும் பக்தர்களை நம்பியே 3-ம் பிரகாரத்தில் கடை வைத்துள்ள அனைத்து கடைகளும் கடந்த 7 மாதத்திற்கு மேலாக திறக்கப்படாமல் மூடியே உள்ளன.
கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களை நம்பியே வாழும் வியாபாரிகள் வருமானம் இன்றி குழந்தைகளுடன் பசி பட்டினியுடன் தவித்து வருகின்றனர். வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கோவிலின் மேற்குவாசல் வழியாக பக்தர்கள் வழக்கம்போல் சென்று வருவதற்கும், 7 மாதத்திற்கு மேலாக மூடப்பட்டுக் கிடக்கும் 3-ம் பிரகார பகுதியில் உள்ள கடைகளை திறப்பதற்கும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், திருக்கோவில் நிர்வாகமும் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கடை வைத்துள்ள வியாபாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X