என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
“வேளாண்சட்டம் விவசாயிகளுக்கு பாதுகாப்பானது“ - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
Byமாலை மலர்22 Oct 2020 11:18 AM GMT (Updated: 22 Oct 2020 11:18 AM GMT)
வேளாண்சட்டம் விவசாயிகளுக்கு பாதுகாப்பானது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது முதலமைச்சர் பழனிசாமி கூறியதாவது:-
* கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட உடன் அரசின் செலவில் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்.
* புதுக்கோட்டையில் அதிக காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன
* புதுக்கோட்டையில் நோய்ப்பரவல் குறைந்திருக்கிறது
* சுமார் 6 ஆயிரம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன
* முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக ஸ்டாலின் அரசைப்பற்றி குறை கூறுகிறார்
* 813 விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்களுக்கு சுமார் 8 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது
* பிரதம மந்திரி குடியிருப்பு கட்டும் திட்டத்தின் கீழ் 2016 முதல் 9 ஆயிரம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன
* கூட்டு குடிநீர் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது
* 2020-21 ஆம் நிதியாண்டில் சுமார் 500 கோடி கடன் வழங்க இலக்கு
* மிக அதிக விளைச்சல் வரும்போது அரசால் முழுமையாக கொள்முதல் செய்து சேமிக்க இயலாது
* அதிக மூட்டைகளை விவசாயிகள் இருப்பு வைத்துக்கொள்ள முடியும்
* வரி மற்றும் இடைத்தரகர் கமிஷனில் இருந்து விவசாயிகள் காப்பாற்றப்படுவார்கள் - முதலமைச்சர்
* மத்திய அரசின் வேளாண் சட்டம் தமிழக விவசாயிகளுக்கு பாதுகாப்பானது
* வியாபாரி-விவசாயி இடையே ஒப்பந்தம் விருப்ப அடிப்படையில் மேற்கொள்ளப்படும்
* விலையேறினாலும் விவசாயிகளுக்கு அதன் பலன் நேரடியாக கிடைக்கும்
* விவசாய சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்பு
* பொதுப்பணித்துறை சார்பாக 272 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன - முதலமைச்சர்
* மழை நீர் முறையாக சேமிக்கப்படுகிறது - முதலமைச்சர்
* கடைமடை வரை முழுமையாக நீர் சென்றடைகிறது - முதலமைச்சர்
* மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் கடலில் வீணாக கலப்பதை தடுத்து கால்வாய் மூலம் வறட்சி பகுதிகளுக்கு கொண்டுவர நடவடிக்கை
* முதல்கட்டமாக ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
* காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு வரும் ஜனவரியில் அடிக்கல் நாட்டப்படும்
* டெல்டா பகுதிகள் முழுவதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X