என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் திருநங்கைகள் சங்க தலைவி கழுத்தை அறுத்து படுகொலை
Byமாலை மலர்22 Oct 2020 1:55 AM GMT (Updated: 22 Oct 2020 1:55 AM GMT)
திருநங்கைகள் சங்க தலைவி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை டிரம்மில் அடைத்து விட்டு தப்பிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை:
கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர்.ரோடு பகுதியை சேர்ந்தவர் சங்கீதா (வயது 65). திருநங்கை. இவர் கோவை மாவட்ட திருநங்கைகள் சங்க தலைவியாக இருந்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து திருநங்கைகளையும் ஒருங்கிணைத்து வடகோவையில் ‘டிரான்ஸ் கிச்சன்’ என்ற பெயரில் பிரியாணி ஓட்டலை தொடங்கி நடத்தி வந்தார்.
அவர், கடந்த 18-ந் தேதி தன்னுடன் வேலை பார்க்கும் திருநங்கை ஒருவருடன் கடைசியாக செல்போனில் பேசியுள்ளார். அதன்பிறகு அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் அவர் எங்காவது சென்று இருக்கலாம் என்று மற்ற திருநங்கைகள் கருதினார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை சங்கீதாவின் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள், வீட்டுக்குள் எங்கிருந்து துர்நாற்றம் வருகிறது? என்பதை அறிய சோதனை நடத்தினர். அப்போது வீட்டுக்குள் இருந்த டிரம்முக்குள் இருந்து துர்நாற்றம் வந்தது தெரியவந்தது. உடனே அந்த டிரம்மை போலீசார் திறந்து பார்த்தனர். அதற்குள் சங்கீதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலிலும் பல இடங்களில் காயங்கள் இருந்தன. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த படுகொலை கடந்த 18-ந் தேதி இரவு நடைபெற்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
கொலையுண்ட சங்கீதா, வசதியான வீட்டில் பிறந்துள்ளார். அவர், திருநங்கையாக மாறியதால் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவருக்கு ஏராளமான சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அந்த சொத்துகளை அடையும் நோக்கத்தில் யாராவது கூலிப்படையை ஏவி கொலை செய்தார்களா? அல்லது அவர் தனியாக இருப்பதை பார்த்து பணம், நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே அவர் நடத்தி வந்த ஓட்டலில் வேலை பார்த்த 2 ஊழியர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர்.ரோடு பகுதியை சேர்ந்தவர் சங்கீதா (வயது 65). திருநங்கை. இவர் கோவை மாவட்ட திருநங்கைகள் சங்க தலைவியாக இருந்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து திருநங்கைகளையும் ஒருங்கிணைத்து வடகோவையில் ‘டிரான்ஸ் கிச்சன்’ என்ற பெயரில் பிரியாணி ஓட்டலை தொடங்கி நடத்தி வந்தார்.
அவர், கடந்த 18-ந் தேதி தன்னுடன் வேலை பார்க்கும் திருநங்கை ஒருவருடன் கடைசியாக செல்போனில் பேசியுள்ளார். அதன்பிறகு அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் அவர் எங்காவது சென்று இருக்கலாம் என்று மற்ற திருநங்கைகள் கருதினார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை சங்கீதாவின் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள், வீட்டுக்குள் எங்கிருந்து துர்நாற்றம் வருகிறது? என்பதை அறிய சோதனை நடத்தினர். அப்போது வீட்டுக்குள் இருந்த டிரம்முக்குள் இருந்து துர்நாற்றம் வந்தது தெரியவந்தது. உடனே அந்த டிரம்மை போலீசார் திறந்து பார்த்தனர். அதற்குள் சங்கீதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலிலும் பல இடங்களில் காயங்கள் இருந்தன. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த படுகொலை கடந்த 18-ந் தேதி இரவு நடைபெற்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
கொலையுண்ட சங்கீதா, வசதியான வீட்டில் பிறந்துள்ளார். அவர், திருநங்கையாக மாறியதால் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவருக்கு ஏராளமான சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அந்த சொத்துகளை அடையும் நோக்கத்தில் யாராவது கூலிப்படையை ஏவி கொலை செய்தார்களா? அல்லது அவர் தனியாக இருப்பதை பார்த்து பணம், நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே அவர் நடத்தி வந்த ஓட்டலில் வேலை பார்த்த 2 ஊழியர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X