என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
Byமாலை மலர்22 Oct 2020 1:50 AM GMT (Updated: 22 Oct 2020 1:50 AM GMT)
தீபாவளியையொட்டி வசூல் வேட்டை நடந்த கனிம வளத்துறை துணை இயக்குனரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 100 பவுன் நகை, ரூ.4 லட்சம் சிக்கியது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தின் 2-வது தளத்தில் கனிம வளத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் தீபாவளி வசூல்வேட்டை நடப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
அப்போது போலீசாரை கண்டதும் சிலர் ரூபாய் நோட்டுகளை ஜன்னல் வழியாக வெளியே வீசினர். அந்த பணத்தை கைப்பற்றிய போலீசார், அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 11 மணி வரை நடைபெற்றது. இதில் ரூ.1 லட்சத்து 150 பறிமுதல் செய்யப்பட்டது. அதுதொடர்பாக கனிம வளத்துறை துணை இயக்குனர் பெருமாள் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
கனிமவளத்துறை துணை இயக்குனர் பெருமாள் திண்டுக்கல் ராஜீவ்நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறார். எனவே, அவரை ராஜீவ்நகரில் இருக்கும் வீட்டுக்கு அதிகாலை 2.30 மணிக்கு போலீசார் அழைத்து சென்று சோதனை நடத்தினர்.
அங்கு காலை 5.30 மணி வரை சோதனை நடைபெற்றது. அப்போது வீட்டில் இருந்த ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் சிக்கியது. அந்த பணம் கணக்கில் வராதது என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக கனிம வளத்துறை துணை இயக்குனர் பெருமாள் மற்றும் அலுவலக ஊழியர் செல்வமணி ஆகியோர் மீது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
துணை இயக்குனர் பெருமாளின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பவானி கவுண்டர்நகர் ஆகும். எனவே, அவருடைய சொந்த ஊரில் இருக்கும் வீட்டிலும் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
அதுகுறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மதியம் 2 கார்களில் பவானி கவுண்டர்நகருக்கு சென்று பெருமாளின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பெருமாளின் மனைவி எழிலரசி இருந்தார்.
சுமார் 5 மணி நேரம் வீடு முழுவதும் நடத்திய சோதனையில் 100 பவுன் நகைகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்து அந்த நகைகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தின் 2-வது தளத்தில் கனிம வளத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் தீபாவளி வசூல்வேட்டை நடப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
அப்போது போலீசாரை கண்டதும் சிலர் ரூபாய் நோட்டுகளை ஜன்னல் வழியாக வெளியே வீசினர். அந்த பணத்தை கைப்பற்றிய போலீசார், அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 11 மணி வரை நடைபெற்றது. இதில் ரூ.1 லட்சத்து 150 பறிமுதல் செய்யப்பட்டது. அதுதொடர்பாக கனிம வளத்துறை துணை இயக்குனர் பெருமாள் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
கனிமவளத்துறை துணை இயக்குனர் பெருமாள் திண்டுக்கல் ராஜீவ்நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறார். எனவே, அவரை ராஜீவ்நகரில் இருக்கும் வீட்டுக்கு அதிகாலை 2.30 மணிக்கு போலீசார் அழைத்து சென்று சோதனை நடத்தினர்.
அங்கு காலை 5.30 மணி வரை சோதனை நடைபெற்றது. அப்போது வீட்டில் இருந்த ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் சிக்கியது. அந்த பணம் கணக்கில் வராதது என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக கனிம வளத்துறை துணை இயக்குனர் பெருமாள் மற்றும் அலுவலக ஊழியர் செல்வமணி ஆகியோர் மீது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
துணை இயக்குனர் பெருமாளின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பவானி கவுண்டர்நகர் ஆகும். எனவே, அவருடைய சொந்த ஊரில் இருக்கும் வீட்டிலும் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
அதுகுறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மதியம் 2 கார்களில் பவானி கவுண்டர்நகருக்கு சென்று பெருமாளின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பெருமாளின் மனைவி எழிலரசி இருந்தார்.
சுமார் 5 மணி நேரம் வீடு முழுவதும் நடத்திய சோதனையில் 100 பவுன் நகைகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்து அந்த நகைகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X