என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடிகை குஷ்பு வருகையால் பா.ஜனதா வலுப்பெறும்- மாநில துணை தலைவர் அண்ணாமலை பேட்டி
Byமாலை மலர்21 Oct 2020 4:04 AM GMT (Updated: 21 Oct 2020 4:04 AM GMT)
நடிகை குஷ்பு வருகையால் பா.ஜனதா கட்சி வலுப்பெறும் என்று கட்சியின் மாநில துணை தலைவர் அண்ணாமலை கூறினார்
திருப்பூர்:
பா.ஜனதா கட்சியின் மாநில துணை தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான அண்ணாமலை நேற்று திருப்பூர் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
பா.ஜனதாவில் நடிகை குஷ்பு சமீபத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். இது மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அவர் அரசியலில் உள்ளார். இரண்டு கட்சிகளை பார்த்து மூன்றாவதாக மோடி தலைமையை ஏற்று பா.ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார். சுயமரியாதை இல்லாததால் முந்தைய கட்சியில் இருந்து வெளியேறியதாக அவர் கூறினார்.
நடிகை குஷ்பு பா.ஜனதா கட்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. அவர் வருகையால் நிச்சயமாக பா.ஜனதா வலுப்பெறும்.
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு சட்டமன்றத்திற்கு பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் பெருமளவில் செல்வார்கள். கூட்டணி குறித்து தலைமை தான் அறிவிக்கும். இப்போதைக்கு அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளோம். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணியில் எந்த குழப்பமும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதா கட்சியின் மாநில துணை தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான அண்ணாமலை நேற்று திருப்பூர் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
பா.ஜனதாவில் நடிகை குஷ்பு சமீபத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். இது மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அவர் அரசியலில் உள்ளார். இரண்டு கட்சிகளை பார்த்து மூன்றாவதாக மோடி தலைமையை ஏற்று பா.ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார். சுயமரியாதை இல்லாததால் முந்தைய கட்சியில் இருந்து வெளியேறியதாக அவர் கூறினார்.
நடிகை குஷ்பு பா.ஜனதா கட்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. அவர் வருகையால் நிச்சயமாக பா.ஜனதா வலுப்பெறும்.
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு சட்டமன்றத்திற்கு பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் பெருமளவில் செல்வார்கள். கூட்டணி குறித்து தலைமை தான் அறிவிக்கும். இப்போதைக்கு அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளோம். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணியில் எந்த குழப்பமும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X