search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்து பாலியல் தொந்தரவு: பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமி கொலை

    விதவை பெண்ணுக்கு அடிக்கடி “மிஸ்டுகால்” கொடுத்து உல்லாசம் அனுபவிக்க துடித்த சபல ஆசாமியை மரத்தில் கட்டி வைத்து அடித்துக்கொலை செய்தனர். இதுதொடர்பாக தாய்-மகள் கைது செய்யப்பட்டனர்.
    காரமடை:

    கோவை மாவட்டம் காரமடை பகுதியை சேர்ந்தவர் 32 வயதான பெண். இவரது கணவன் இறந்ததால், தனது குழந்தையுடன் தாய் வீட்டிலேயே வசித்து வருகிறார். கோவை ரத்தினபுரி அருள்நகரை சேர்ந்தவர் பெரியசாமி(46). இவர் அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்து வந்தார். போனை எடுத்தால் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் அந்த பெண் தன்னுடைய தாயாரிடம் கூறி அழுதார்.

    இந்தநிலையில் அந்த பெண்ணிடம் போன் செய்த பெரியசாமி, மேட்டுப்பாளையம் அருகே உள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வருமாறும், அங்கு ஜாலியாக இருக்கலாம் என்றும் போனில் கூறி உள்ளார். இதனைக்கேட்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.

    இந்தநிலையில் பெரிய சாமியின் சபல புத்திக்கு பாடம் புகட்ட தாயும், மகளும் சேர்ந்து திட்டமிட்டனர். அதன் படி, அந்த பெண் பெரியசாமியிடம் நீங்கள் சொன்ன இடத்துக்கு வேண்டாம். வீட்டுக்கே வந்து விடுங்கள் என்று கூறியுள்ளார். பழம் நழுவி பாலில் விழுவதாக நினைத்த சபல ஆசாமியான பெரியசாமி, உடனே ஆசை, ஆசையாக காரமடை பெரியார் நகர் பகுதிக்கு வந்தார். ஏற்கனவே திட்டமிட்டப்படி மறைந்து இருந்த அந்த பெண்ணின் உறவினர்கள் பெரியசாமியை மடக்கிப்பிடித்து அங்குள்ள ஒரு வேப்பமரத்தில் கட்டி வைத்தனர்.

    பின்னர் தாயும், மகளும் சேர்ந்து சரமாரியாக கட்டையாலும், கைகளாலும் பெரியசாமியை அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பெரியசாமி அந்த இடத்திலேயே இறந்து போனார். இந்த கொலை குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து மகளையும், தாயையும் கைது செய்தனர். மேலும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×