search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு
    X
    அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

    7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு விரைந்து ஒப்புதல் தர கவர்னர் உறுதி அளித்துள்ளார் - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

    மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர கவர்னர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்த மசோதாவிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதனால், மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது

    இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை 5 அமைச்சர்கள் இன்று சந்தித்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கேபி அன்பழகன், செங்கோட்டையன், சிவி சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் கவர்னரை சந்தித்தனர். 

    இந்த சந்திப்பின் போது 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

    கவர்னருடனான சந்திப்பிற்கு பின் அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

    இட ஒதுக்கீடு வழங்கினால் தான், அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவராக முடியும்

    7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறு முதலமைச்சர் அறிவுரைப்படி கவர்னரை சந்தித்தோம்

    தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து கவர்னரிடம் விளக்கி கூறினோம்

    மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக கவர்னர் உறுதியளித்துள்ளார்

    நல்ல முடிவை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார்

    ஆளுநரின் பரிசீலனையில் உள்ள மசோதாவுக்கு கட்டாயப்படுத்த முடியாது

    சமூக நீதியை பாதுகாக்க விரைந்து முடிவு எடுக்குமாறு ஆளுநரிடம் கூறியுள்ளோம். முடிவு எடுக்க ஆளுநருக்கு கால நிர்ணயம் விதிக்க முடியாது.

    என அமைச்சர் தெரிவித்தார்.

    Next Story
    ×