search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பள்ளி மாணவிக்கு ஆபாச படம் அனுப்பிய வாலிபர் கைது

    போலி இ-மெயில் மூலம் பள்ளி மாணவிக்கு ஆபாச படம் அனுப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    திண்டுக்கல்:

    15 வயது பள்ளி மாணவி ஒருவரின் இ-மெயில் முகவரிக்கு, மற்றொரு இ-மெயில் முகவரியில் இருந்து ஆபாச படங்கள் வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி, பெற்றோரிடம் தெரிவித்தாள். இதுகுறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தீவிர விசாரணை நடத்தினார். 

    விசாரணையில், மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பியது, திண்டுக்கல் காந்திஜி நகரை சேர்ந்த ஜனகன் (வயது 20) என்பதும், போலி இ-மெயில் முகவரி மூலம் அவர் அந்த படங்களை மாணவிக்கு அனுப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜனகனை கைது செய்தனர்.
    Next Story
    ×