என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் குணமடைந்தார்
Byமாலை மலர்1 Oct 2020 2:59 AM GMT (Updated: 1 Oct 2020 2:59 AM GMT)
கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார், 15 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அ.தி.மு.க எம்.எ.ஏ. கே.எஸ்.விஜயகுமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மேற்கொண்ட பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கடந்த மாதம் 23-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, எல்லாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த மஞ்சங்கரணையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பினார்.
சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமாரை அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் வீட்டில் உள்ள பூஜை அறையில் அவர் சாமி கும்பிட்டார். மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார், 15 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அ.தி.மு.க எம்.எ.ஏ. கே.எஸ்.விஜயகுமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மேற்கொண்ட பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கடந்த மாதம் 23-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, எல்லாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த மஞ்சங்கரணையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பினார்.
சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமாரை அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் வீட்டில் உள்ள பூஜை அறையில் அவர் சாமி கும்பிட்டார். மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார், 15 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X