என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
8 நாட்களில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்தது
Byமாலை மலர்30 Sep 2020 3:08 AM GMT (Updated: 30 Sep 2020 3:08 AM GMT)
கடந்த 21-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு வரை 8 நாட்களில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்துள்ளது.
ஊத்துக்கோட்டை:
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த 18-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 20-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கும், 21-ந்தேதி பூண்டி எரிக்கும் சென்றடைந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
கடந்த 21-ந் தேதி பூண்டி ஏரியில் நீர் மட்டம் 17 அடியாக பதிவானது. 109 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருந்தது. கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு ஏரியின் நீர் மட்டம் 23.03 அடியாக பதிவானது. அதாவது கடந்த 21-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு வரை 8 நாட்களில் நீர் மட்டம் 6 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஏரியில் 582 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 734 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 15 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். நேற்று காலை 6 மணி நிலவரப்படி 47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அங்கிருந்து பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கன அடி திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் ஜீரோ பாயிண்டிற்கு வினாடிக்கு 780 கன அடியாக வந்து கொண்டிருந்தது.
கண்டலேறு அணையில் போதிய நீர் இருப்பில் உள்ளதால் பூண்டி ஏரிக்கு தேவையான அளவு தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளதாக ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X