search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரடாச்சேரி அருகே எண்கண் ஊராட்சியில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    கொரடாச்சேரி அருகே எண்கண் ஊராட்சியில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    பாஜக ஆட்சி அமைக்க தொண்டர்கள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும்- கருப்பு முருகானந்தம்

    தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க தொண்டர்கள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்று மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கூறினார்.
    கொரடாச்சேரி:

    கொரடாச்சேரி ஒன்றியம் எண்கண் ஊராட்சியில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட தலைவர் ராகவன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு பா.ஜ.க. கொடியினை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து கூட்டத்தில் பா.ஜ.க. துணை தலைவர் கருப்பு முருகானந்தம் பேசுகையில், பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் காஷ்மீர் முதல் குமரி வரை வசிக்கும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைந்துள்ளது.

    இந்திய மக்களின் அசைக்க முடியாத ஆளுமை மிக்க தலைவராக மோடி உயர்ந்துள்ளார். விவசாயிகள் அச்சமின்றி விவசாய பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு ஏற்படாதவாறு நேர்மையான ஆட்சியை மோடி அளித்து வருகிறார்.

    இந்தியாவில் பா.ஜ.க. தலைமையில் ஆட்சி உள்ளது போல் தமிழகத்திலும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். அதற்கு பா.ஜ.க. தொண்டர்கள் தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் வெற்றிவேந்தன் தலைமையில் பலர் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் பா.ஜ.க. நிர்வாகிகள் கோவி சந்துரு, கலையரசன், செந்திலரசன், சிவசங்கரன், ரெங்கதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×