என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாஜக ஆட்சி அமைக்க தொண்டர்கள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும்- கருப்பு முருகானந்தம்
Byமாலை மலர்27 Sep 2020 7:52 AM GMT (Updated: 27 Sep 2020 7:52 AM GMT)
தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க தொண்டர்கள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்று மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கூறினார்.
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி ஒன்றியம் எண்கண் ஊராட்சியில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட தலைவர் ராகவன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு பா.ஜ.க. கொடியினை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து கூட்டத்தில் பா.ஜ.க. துணை தலைவர் கருப்பு முருகானந்தம் பேசுகையில், பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் காஷ்மீர் முதல் குமரி வரை வசிக்கும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைந்துள்ளது.
இந்திய மக்களின் அசைக்க முடியாத ஆளுமை மிக்க தலைவராக மோடி உயர்ந்துள்ளார். விவசாயிகள் அச்சமின்றி விவசாய பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு ஏற்படாதவாறு நேர்மையான ஆட்சியை மோடி அளித்து வருகிறார்.
இந்தியாவில் பா.ஜ.க. தலைமையில் ஆட்சி உள்ளது போல் தமிழகத்திலும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். அதற்கு பா.ஜ.க. தொண்டர்கள் தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் வெற்றிவேந்தன் தலைமையில் பலர் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் பா.ஜ.க. நிர்வாகிகள் கோவி சந்துரு, கலையரசன், செந்திலரசன், சிவசங்கரன், ரெங்கதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X