search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்னல்
    X
    மின்னல்

    வியாசர்பாடியில் மின்னல் தாக்கி வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்

    வியாசர்பாடியில் மின்னல் தாக்கி வீடுகளில் டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன.
    பெரம்பூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    அப்போது வியாசர்பாடி பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில் சஞ்சய் நகர் பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் உள்ள குருத்து இரண்டாக பிளந்தது.

    மேலும் அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன. சில வீடுகளில் ரெகுலேட்டர் வெடித்து சிதறியது.
    Next Story
    ×