என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏற்காடு அடிவாரத்தில் இறந்த குட்டியுடன் திரியும் தாய் குரங்கு
Byமாலை மலர்25 Sep 2020 11:55 AM GMT (Updated: 25 Sep 2020 11:55 AM GMT)
ஏற்காடு அடிவாரத்தில் வாகனத்தில் சிக்கி குட்டி குரங்கு ஒன்று இறந்தது. அந்த குட்டி குரங்கை அதன் தாய் குலுக்கி, தடவி, வாயில் வைத்து ஊதியதை நடைபயிற்சியில் ஈடுபட்ட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கன்னங்குறிச்சி:
ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு மலைப்பாதையில் ஏராளமான குரங்குகள் வாழ்ந்து வருகிறது. சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வண்ணமாக மலைப்பாதை எங்கும் அமர்ந்து இருக்கும் குரங்குகள் அடிக்கடி வாகனத்தில் சிக்கி இறந்து விடுகிறது.
இதேபோல் நேற்று காலை வாகனத்தில் சிக்கி குட்டி குரங்கு ஒன்று இறந்து கிடந்தது. அந்த இறந்துபோன குட்டி குரங்கை அதன் தாய் ரோட்டின் ஓரத்திற்கு எடுத்துவந்து அது உயிர்பெற அதனை குலுக்கி, தடவி, வாயில் வைத்து ஊதியது.
இதனை அங்கு நடைபயிற்சியில் ஈடுபட்ட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தாய் குரங்கு தனது குட்டி உயிருடன் இருப்பதாக நினைத்து அதனை தூக்கிக்கொண்டு செல்வதும், அதனை தட்டி விடுவதும் பார்த்தவர்களின் நெஞ்சம் தொட்டது. பின்னர் கூட்டம் அதிகமானதால் இறந்த குட்டிக் குரங்கை தாய் குரங்கு தூக்கிக்கொண்டு மறைவான வனப்பகுதிக்கு சென்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X