என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக சரிந்தது
Byமாலை மலர்24 Sep 2020 7:00 AM GMT (Updated: 24 Sep 2020 7:00 AM GMT)
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீராக குறைந்தது.
பென்னாகரம்:
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதையடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் உபரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட் டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. நேற்றுமுன்தினம் நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
மேலும் காவிரி கரையோர பகுதிகளான ஒகேனக்கல், சத்திரம், நாடார் கொட்டாய் பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நேற்று முதல் படிப்படியாக நீர்வரத்து குறைய தொடங்கியது. நேற்று நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு 65 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இன்று காலை கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து 29970 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 17,479 கன அடி நீரும் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீராக குறைந்தது. தற்போது பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நீர்வரத்தை கண்காணித்து வருகிறார்கள். மேலும் ஒகேனக்கல் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கக்கூடாது என்றும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து வருகிறார்கள்.
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதையடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் உபரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட் டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. நேற்றுமுன்தினம் நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
மேலும் காவிரி கரையோர பகுதிகளான ஒகேனக்கல், சத்திரம், நாடார் கொட்டாய் பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நேற்று முதல் படிப்படியாக நீர்வரத்து குறைய தொடங்கியது. நேற்று நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு 65 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இன்று காலை கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து 29970 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 17,479 கன அடி நீரும் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீராக குறைந்தது. தற்போது பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நீர்வரத்தை கண்காணித்து வருகிறார்கள். மேலும் ஒகேனக்கல் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கக்கூடாது என்றும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X