என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கால்நடை மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்க காலநீட்டிப்பு- அடுத்த மாதம் 9-ந்தேதி கடைசிநாள்
Byமாலை மலர்24 Sep 2020 1:38 AM GMT (Updated: 24 Sep 2020 1:38 AM GMT)
கால்நடை மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் நாள் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந்தேதி மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2020-21-ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு மற்றும் பி.டெக்.(உணவு தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்பு) ஆகியவற்றிற்கான மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களிடம் இருந்து 24.8.2020 முதல் 28.9.2020 வரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் முதல்- அமைச்சர் ஆணைக்கிணங்கவும் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் நாள் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந்தேதி மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதுவரை 12 ஆயிரத்து 9 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அதில், கால்நடை மருத்துவத்திற்கு 9 ஆயிரத்து 787 மாணவ-மாணவிகளும் மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு 2 ஆயிரத்து 222 மாணவ-மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 18 ஆயிரத்து 438 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், 15 ஆயிரத்து 666 மாணவ-மாணவிகள் கால்நடை மருத்துவ பட்டப்பிடிப்பிற்கும், 2 ஆயிரத்து 772 மாணவ-மாணவிகள் தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கும் விண்ணப்பித்திருந்தார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2020-21-ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு மற்றும் பி.டெக்.(உணவு தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்பு) ஆகியவற்றிற்கான மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களிடம் இருந்து 24.8.2020 முதல் 28.9.2020 வரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் முதல்- அமைச்சர் ஆணைக்கிணங்கவும் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் நாள் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந்தேதி மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதுவரை 12 ஆயிரத்து 9 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அதில், கால்நடை மருத்துவத்திற்கு 9 ஆயிரத்து 787 மாணவ-மாணவிகளும் மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு 2 ஆயிரத்து 222 மாணவ-மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 18 ஆயிரத்து 438 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், 15 ஆயிரத்து 666 மாணவ-மாணவிகள் கால்நடை மருத்துவ பட்டப்பிடிப்பிற்கும், 2 ஆயிரத்து 772 மாணவ-மாணவிகள் தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கும் விண்ணப்பித்திருந்தார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X