என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நெல்லையில் மகள் உறவுமுறை உள்ள சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது
நெல்லை:
நெல்லையை சேர்ந்த 42 வயது தொழிலாளி ஒருவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் 6 வயது பெண் குழந்தையுடன் இருந்த ஒரு விதவை பெண்ணை 2-வதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.
2-வது மனைவியின் குழந்தையை தன் குழந்தையாக நினைத்து படிக்க வைத்தார். சந்திப்பு பகுதியில் படித்து வந்த அந்த சிறுமி 6-ம் வகுப்புக்கு மேல் படிக்க மறுத்து வீட்டிலேயே இருந்து வந்தார். தற்போது அந்த சிறுமிக்கு 15 வயது ஆகிவிட்டது.
சிறுமியின் தாயார் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் தான் வீட்டுக்கு வருவார். ஆனால் தந்தை முறையான தூய்மை பணியாளர் வேலையை முடித்துவிட்டு பகல் 12 மணி அளவிலேயே வீட்டுக்கு வந்து விடுவாராம்.
அப்போது வீட்டில் தனியாக இருக்கும் மகள் உறவு முறையுள்ள அந்த சிறுமியை ஆசைவார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். சிறுமியின் வயிறு பெரிதாகிக் கொண்டே வருவதை கவனித்த தாயார், அதிர்ச்சி அடைந்து விசாரித்தபோது தனது 2-வது கணவரே மகளை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் நெல்லை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷிதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, தூய்மை பணியாளர் மீது வழக்குபதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்