search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சென்னையில் மட்டும் 9 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம்

    தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 344 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 47 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

    வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

    மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 492 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்து 971 ஆக அதிகரித்துள்ளது.

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 871 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

    அரியலூர் - 187
    செங்கல்பட்டு - 2,424
    சென்னை - 9,871
    கோவை - 4,475
    கடலூர் - 2,208
    தர்மபுரி - 992
    திண்டுக்கல் - 597
    ஈரோடு - 1,144
    கள்ளக்குறிச்சி - 869
    காஞ்சிபுரம் - 1,061
    கன்னியாகுமரி - 631
    கரூர் - 472
    கிருஷ்ணகிரி - 836 
    மதுரை - 792
    நாகை - 944
    நாமக்கல் - 934
    நீலகிரி - 724
    பெரம்பலூர் - 102
    புதுக்கோட்டை - 817
    ராமநாதபுரம் - 230
    ராணிப்பேட்டை - 540
    சேலம் - 2,260
    சிவகங்கை - 279
    தென்காசி - 640
    தஞ்சாவூர் - 1,143
    தேனி - 547
    திருப்பத்தூர் - 638
    திருவள்ளூர் - 1,720
    திருவண்ணாமலை - 1,203
    திருவாரூர் - 827
    தூத்துக்குடி - 803
    திருநெல்வேலி - 962
    திருப்பூர் - 1,590
    திருச்சி - 767
    வேலூர் - 916
    விழுப்புரம் - 984
    விருதுநகர் - 316
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 4
    உள்நாடு - 44
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

    மொத்தம் - 46,495

    Next Story
    ×