என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பில்லூர் அணையில் தண்ணீர் திறப்பு- கரையோர பகுதி மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை
Byமாலை மலர்21 Sep 2020 10:35 AM GMT (Updated: 21 Sep 2020 10:35 AM GMT)
மழை காரணமாக நீர்மட்டம் 97 அடியை எட்டியதால் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பில்லூர் அணை உள்ளது. இது நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 100 அடி ஆகும். நேற்றுமுன்தினம் இரவு நீலகிரி மாவட்டம் மற்றும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று காலை அணையின் நீர்மட்ட உயரம் 95 அடியாக இருந்தது. காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
இதனால் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்தது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி அணையில் 4 மதகுகள் திறக்கப்பட்டன. அதன் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது இதனால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பவானி அம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் பவானி ஆற்று பாலத்திற்கு சென்று சைரன் ஒலித்து பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை செய்தனர்.
கோவையிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகள் மற்றும் மார்க்கெட்டுகள் சேறும், சகதியுமாக மாறி காட்சி அளிக்கிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பில்லூர் அணை உள்ளது. இது நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 100 அடி ஆகும். நேற்றுமுன்தினம் இரவு நீலகிரி மாவட்டம் மற்றும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று காலை அணையின் நீர்மட்ட உயரம் 95 அடியாக இருந்தது. காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
இதனால் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்தது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி அணையில் 4 மதகுகள் திறக்கப்பட்டன. அதன் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது இதனால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பவானி அம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் பவானி ஆற்று பாலத்திற்கு சென்று சைரன் ஒலித்து பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை செய்தனர்.
கோவையிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகள் மற்றும் மார்க்கெட்டுகள் சேறும், சகதியுமாக மாறி காட்சி அளிக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X