என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இ-பாஸ் இன்றி கொடைக்கானலுக்கு அனுமதி
Byமாலை மலர்17 Sep 2020 8:51 AM GMT (Updated: 17 Sep 2020 11:39 AM GMT)
இ-பாஸ் இன்றி கொடைக்கானலுக்கு வர அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளை கவர பூங்கா நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும் சுற்றுலா நகரங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய கோடை வாசஸ்தலங்களுக்கு செல்ல அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதனால் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தவர்கள் வெள்ளி நீர் வீழ்ச்சி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு இ-பாஸ் கேட்டு கெடுபிடி செய்தனர். மேலும் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதனால் கொடைக்கானல் வரை வந்தவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்கு வருபவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதே போல அரசு பஸ்களில் கொடைக்கானல் வருபவர்களுக்கும் இ-பாஸ் கேட்கப்பட்டது.
இதனால் உள்ளூர் மக்களும் மிகுந்த அவதியடைந்து வந்த நிலையில் இன்று முதல் கொடைக்கானல் வருவதற்கு இ-பாஸ் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை முதல் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
கொடைக்கானலில் பிரையண்ட் பூங்கா, செட்டியார்பூங்கா, ரோஜா பூங்காஆகியவை மட்டுமே திறக்கப்பட்டு இருந்தது. சுற்றுலா பயணிகளின் மிக முக்கிய தலமான ஏரி மூடப்பட்டு இருந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கொடைக்கானலில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் விரைவில் அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து வெள்ளி நீர் வீழ்ச்சியில் உள்ள பூங்கா திறக்கப்பட்டது. மேலும் பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 6 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட பூக்களால் உருவாக்கப்பட்ட மயில், தாஜ்மஹால் ஆகியவை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சாண்டலின் வகை பூக்களும், ஹைரேசின் வகை கீரைகளால் வடிவமைக்கப்பட்ட இந்திய வரைபடம், இதய வடிவம், நட்சத்திர வடிவம் ஆகியவையும் சுற்றுலா பயணிகளை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளர்வுகளுக்கு பிறகு இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதி அளித்ததால் இத்தொழிலை நம்பியுள்ள ஓட்டல் உரிமையாளர்கள், வாகன ஓட்டுனர்கள், வழிகாட்டிகள், விடுதி உரிமையாளர்கள் ஆகியோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் கொடைக்கானலில் மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும் சுற்றுலா நகரங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய கோடை வாசஸ்தலங்களுக்கு செல்ல அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதனால் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தவர்கள் வெள்ளி நீர் வீழ்ச்சி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு இ-பாஸ் கேட்டு கெடுபிடி செய்தனர். மேலும் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதனால் கொடைக்கானல் வரை வந்தவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்கு வருபவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதே போல அரசு பஸ்களில் கொடைக்கானல் வருபவர்களுக்கும் இ-பாஸ் கேட்கப்பட்டது.
இதனால் உள்ளூர் மக்களும் மிகுந்த அவதியடைந்து வந்த நிலையில் இன்று முதல் கொடைக்கானல் வருவதற்கு இ-பாஸ் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை முதல் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
கொடைக்கானலில் பிரையண்ட் பூங்கா, செட்டியார்பூங்கா, ரோஜா பூங்காஆகியவை மட்டுமே திறக்கப்பட்டு இருந்தது. சுற்றுலா பயணிகளின் மிக முக்கிய தலமான ஏரி மூடப்பட்டு இருந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கொடைக்கானலில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் விரைவில் அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து வெள்ளி நீர் வீழ்ச்சியில் உள்ள பூங்கா திறக்கப்பட்டது. மேலும் பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 6 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட பூக்களால் உருவாக்கப்பட்ட மயில், தாஜ்மஹால் ஆகியவை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சாண்டலின் வகை பூக்களும், ஹைரேசின் வகை கீரைகளால் வடிவமைக்கப்பட்ட இந்திய வரைபடம், இதய வடிவம், நட்சத்திர வடிவம் ஆகியவையும் சுற்றுலா பயணிகளை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளர்வுகளுக்கு பிறகு இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதி அளித்ததால் இத்தொழிலை நம்பியுள்ள ஓட்டல் உரிமையாளர்கள், வாகன ஓட்டுனர்கள், வழிகாட்டிகள், விடுதி உரிமையாளர்கள் ஆகியோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் கொடைக்கானலில் மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X